சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
7.017
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கோவலன் நான்முகன் வானவர் கோனும் பண் - நட்டராகம் (திருநாவலூர் (திருநாமநல்லூர்) நாவலீசுவரர் சுந்தராம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=WN58QVk8-Rk |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.017  
கோவலன் நான்முகன் வானவர் கோனும்
பண் - நட்டராகம் (திருத்தலம் திருநாவலூர் (திருநாமநல்லூர்) ; (திருத்தலம் அருள்தரு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு நாவலீசுவரர் திருவடிகள் போற்றி )
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [1] |
தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன் வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்; புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [2] |
வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர் மெல்லியலை ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியை; பூண்பது ஆக நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே. | [3] |
அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்; தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்; நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [4] |
உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை; செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால், எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [5] |
கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்; வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன் நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே. | [6] |
தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி, போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே. | [7] |
வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து; தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய், வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [8] |
படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும், வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள் இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [9] |
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்; அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்; தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [10] |
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ் காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே. | [11] |